பொது போக்குவரத்து சேவையில் பாலியல் தொல்லை: 18 பேர் கைது

 


பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பவர்களை கண்டறியும் விசேட நடவடிக்கையில் நேற்று (07) மாத்திரம் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, பொது போக்குவரத்து சேவையில் பாலியல் தொல்லை கொடுத்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தவிர திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட  24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் சிவில் உடையில் பல பொலிஸ் குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK