போலியான செய்திகளை வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் ஊடகங்களுக்கு ஆப்பு!


இலங்கையில் சில ஊடகங்கள் வியாபாரத்தை அதிகரிக்கும் நோக்கத்திற்காக பொய்யான செய்திகளை புனைந்தும், மிகைப்படுத்தகப்பட்ட தலைப்புக்களை போட்டும் அலங்கரித்து செய்திகளை வெளியிடுவதனால் வாசகர்கள் உன்மையான ஊடகம் எது என தேடி அலைகிறார்கள். 



 அவ்வகையில் ஒரு சில யூடூப் சனல்கள் பொய்யான தலைப்பு மற்றும் போலி புகைப்படங்களை இணைத்து வீடியோ லிங்கை அழுத்த செய்து அதனூடாக பணம் தேடுவதாகவும் ஒரு கண்காணிப்பு கூறுகிறது. 

 இதன் காரணமாக இலங்கை அரசாங்கம் இவ்வாறான சமூக ஊடகங்கள் தொடர்பில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கு தயாராகி வருகின்றது.

 இந்த சமூகஊடகங்களை சரியான முறையில் வெளிப்படுத்தி அதனூடாக இலங்கைக்கு டொலர் வருமானம் கிடைப்பதற்கு ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகின்றன.

 இந்த நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் காரணமாக சில அவதூறு பரப்பும் பொய்யான தகவல்களினை பரப்பும் ஊடகங்களுக்கு தடைகளும் விதிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.




BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK