கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த காதி நீதிவான் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கறுவா தோட்ட பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸார் சந்தேக நபரான காதி நீதிபதியை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் புதன்கிழமை ஆஜர்படுத்தியதையடுத்து நீதிவான் அவரை எதிர்வரும் டிசம்பர் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
ஒருவருக்கு ஆவணமொன்றினைக் கையளிக்கும் போது ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஸ்தலத்திலேயே இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பில் விடிவெள்ளி காதி நீதிவான்கள் போரத்தைத் தொடர்பு கொண்டு வினவியபோது சட்டரீதியான பணப் பரிமாற்றங்களுக்கு உரிய ரசீது வழங்கப்பட வேண்டுமெனவும் அவ்வாறல்லாது பணம் பெற்றுக்கொள்ள முடியாதெனவும் ஏற்கனவே காதி நீதிபதிகள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK