கல்முனை முன்பள்ளி ஆசிரியர் சங்க விஷேட ஆசிரியர்தின விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்.

 

நூருல் ஹுதா உமர் 

சர்வதேச ஆசிரியர்தினத்தை முன்னிட்டு கல்முனை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினால் சர்வதேச ஆசிரியர்தின விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நவம்பர் (10) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்விழா சமாதான பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எம்.எச்.ஹிஜ்ரா, ஹுஸைனியா கிட்ஸ் மொண்டசோறியின் பணிப்பாளர் ஏ.எல்.நஸ்றீன் மற்றும் அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எம்.எச்.எஸ்.சஹீறா ஆகியோரின் தலைமையில், கல்முனை கமு/கமு/ அல்-பஹ்றியா மகா வித்தியாலயக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களும், கெளரவ அதிதியாக ஏ.சீ.ஏ அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சீ.அலி சப்றி, விஷேட அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலக கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.ஜிஹானா ஆலிஃப், கல்முனை வலய பாலர் பாடசாலை கல்விப் பணியக வெளிக்கள உத்தியோகத்தர் அஷ்-ஷேய்க் ஐ.எல்.முஹம்மது அனீஸ், கமு/கமு/ அல்-பஹ்றியா மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தோடு இந்நிகழ்வில் பங்குபற்றிய ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களும், பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.










BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK