இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 25வது சிரேஷ்ட அதிகாரிகள் குழுக் கூட்டம் கொழும்பில் நிறைவு

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளின் இருபத்தி ஐந்தாவது கூட்டத்திற்காக இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளின் அதிகாரிகள் கொழும்பில் ஒன்றுகூடியிருந்தனர். 2023 அக்டோபர் 9 முதல் 10 வரையான இரண்டு நாட்கள் இந்தக் கூட்டம் வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இருபத்தி மூன்று (23) இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளான அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், கொமோரோஸ், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகஸ்கார், மலேசியா, மாலைதீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், ஓமான், சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, சோமாலியா, தென்னாபிரிக்கா, தான்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் யெமன் ஆகியவற்றைச் சேர்ந்த சிரேஷ்ட மட்டத்திலான பங்கேற்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்து சமுத்திர விளிம்பு சங்கத்துடனான எதிர்காலத் திட்டங்களை மதிப்பாய்வு செய்வதற்காக, கூட்டத்தின் இரண்டாவது நாளில், உறுப்பு நாடுகள் மற்றும் உரையாடல் பங்காளிகளான சீனா, எகிப்து, சவூதி அரேபியா, ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, ரஷ்யக் கூட்டமைப்பு, துருக்கி, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளிடையே ஊடாடும் உரையாடல் இடம்பெற்றது.

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பினர்கள், அதன் உரையாடல் பங்காளிகள் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் புதிய உரையாடல் பங்காளியாக இணைந்துள்ள சவுதி அரேபியா இராச்சியம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளை தனது தொடக்க உரையில் வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன வரவேற்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சங்கத்தின் தலைமைத்துவத்தை வகித்தமைக்காக பங்களாதேஷூக்கு நன்றி தெரிவித்த அவர், சங்கத்தின் துணைத் தலைவராக இந்தியா பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தை ஒரு துடிப்பான அமைப்பாக மாற்றுவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளினதும் அர்ப்பணிப்பையும், பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு தளமாக இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தை வலுப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் வெளியுறவு செயலாளர் விஜேவர்தன பாராட்டினார். இரண்டு தசாப்தங்களின் பின்னர்இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு முன்னர் 2003 முதல் 2004 வரை தலைமைப் பொறுப்பை வகித்து வந்ததாகவும், இந்து சமுத்திரத்திற்கு இலங்கை அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் வலியுறுத்தினார். இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அனைத்து உறுப்பு நாடுகளுடனும், சங்கத்தின் நோக்கங்களை அடைவதற்காக உரையாடல் பங்காளிகள் உட்பட ஏனைய பங்காளிகளுடனும் தொடர்ந்தும் நெருக்கமாக பணியாற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இலங்கை தனது தலைமைப் பதவிக்காகத் தெரிவுசெய்துள்ள 'பிராந்திய கட்டிடக்கலையை வலுப்படுத்துதல்: இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்துதல்' என்ற தொனிப்பொருள், பிராந்தியத்தின் அடையாளத்தையும் விதியையும் வடிவமைப்பதில் இந்து சமுத்திரம் வகிக்கும் முக்கிய பங்கு குறித்த நாட்டின் ஆழமான புரிதலை பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார். வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்து சமுத்திர விளிம்பு சங்கம் உறுப்பு நாடுகள் தங்கள் சமூகங்கள், மக்கள் மற்றும் பொருளாதாரங்களை பல நூற்றாண்டுகளாக வளர்த்து வந்த இந்து சமுத்திரத்தின் நீரால் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இது நினைவூட்டுகின்றது.

சிரேஷ்ட அதிகாரிகள் குழுக் கூட்டத்தின் தொடக்க அமர்வில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி சல்மான் அல் ஃபரிசி, இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் துணைத் தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் (ஓசியானியா) பரமிதா திரிபாதி மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் முன்னாள் தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சின் கடல்சார் விவகாரப் பிரிவின் செயலாளர் ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) எம்.டி. குர்ஷத் ஆலம் ஆகியோரும் கருத்துரைகளை வழங்கினார்.

2023 அக்டோபர் 11ஆந் திகதி கொழும்பில் ஒன்று கூடிய இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 23வது அமைச்சர்கள் குழுவின் முடிவு ஆவணமான கொழும்பு அறிக்கையை ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட பரிந்துரைகளை சிரேஷ்ட அதிகாரிகள் வழங்கினர்.

கொழும்பில் 2023 அக்டோபர் 11ஆந் திகதி ஒன்று கூடவுள்ள இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 23வது அமைச்சர்கள் குழுவிற்கு, விளைவு ஆவணமான கொழும்பு அறிக்கையை ஏற்றுக்கொள்வது உட்பட பரிந்துரைகளை சிரேஷ்ட அதிகாரிகள் வழங்கினர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 அக்டோபர் 10











BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK