கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கடமை சபத நிகழ்வு !

(நூருல் ஹுதா உமர்)

தரத்தை நோக்கிய வீறுநடை எனும் தொனிப்பொருளின் கீழான கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் விசேட கடமை சபதம் நிகழ்வு இன்று (13) பணிமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை வழிநடாத்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம். மாஹிர் பிராந்திய பணிப்பாளர் சார்பாக தலைமையுரை நிகழ்த்தியதுடன் உளநலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஜே.நௌபல் அவர்களினால் நற்சிந்தனையுடனான உரையொன்றும் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் மலேரியா தடுப்பு இயக்கத்தின் பிராந்திய மலேரியா மேற்பார்வை வைத்திய அதிகாரி எம்.எம்.நௌசாத் விசேட  விளக்கக்காட்சியுடன் உரை நிகழ்த்தியிருந்தார்.

இரண்டாம் கட்ட நிகழ்வாக தாய்சேய் நலப்பிரிவில் கடமையாற்றி விடுகை பெற்றுச் செல்லும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.அஸ்வர் அவர்களுக்கு அதன் முன்னாள் பொறுப்பு வைத்திய அதிகாரியான வைத்தியர் எம்.ஏ.சீ.எம் .பசால் அவர்களும் தற்போதைய பொறுப்பு வைத்திய அதிகாரியான வைத்தியர் ஏ.எச். ரிஸ்பின் அவர்களும் இணைந்து கௌரவிப்பு நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது







Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK