IMF பணிப்பாளரிடமிருந்து விசேட அறிக்கை


இலங்கையின் பொருளாதார இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்ட முடிந்ததில் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தொிவித்துள்ளார். 


இது இலங்கைக்கு ஒரு முக்கியமான முன்னேற்றமாக இருக்கும் என அவர் டுவிட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர், ஊழியர் மட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதுடன், 48 மாத வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டது. 

இதேவேளை, வெளிநாட்டுக் கடன்களை முறையாகத் திட்டமிட்டு செயற்படுத்துவதனால் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை பங்களாதேஷ் எதிர்கொள்ளாது என பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

இந்திய ஏஎன்ஐ செய்தி சேவைக்கு பேட்டியளித்த பங்களாதேஷ் பிரதமர், மக்களுக்கு பயனளிக்காத எந்த திட்டத்திற்கும் தனது அரசு பணத்தை செலவிடாது என தெரிவித்துள்ளார்.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK