பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு


கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கும் போது, ஒருநாள் சேவையின் கீழ் பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட சான்றிதழை இணைக்க வேண்டியது அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது


பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்பும் போது பாடசாலை பரீட்சார்த்திகள் எனில், பாடசாலை அதிபரினால் வழங்கப்படும் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களை மாத்திரம் இணைப்பது போதுமானதாகும்.

அத்துடன், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தில், பணம் செலுத்தி பரீட்சை பெறுபேறுகளை, பெற்றுக்கொண்டமைக்கான பத்திரத்தை இணைத்து விண்ணப்பிப்பது போதுமானதாகும் எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் பெறுபேறுகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான https://www.doenets.lk க்கு பிரவேசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK