தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்தி


 நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புங்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்ற சிறப்புக் குழு முன்மொழிந்துள்ள தேர்தல் முறை திருத்தங்கள் குறித்து அங்கு விவாதிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக இது தொடர்பாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK