மக்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சி பொது நிகழ்வுகளை தவிர்த்துக்கொள்ளும் அமைச்சர்கள்


அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது நிகழ்வை தவிர்த்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மின்வெட்டு, சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்தால் நாட்டு மக்கள் கடும் கொதிப்பில் உள்ள நிலையிலேயே அவர்கள் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அரசுமீதான அதிருப்தியை மக்கள் தம்மீது காட்டக்கூடும் என்பதாலும், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டுமே அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரியவருகின்றது.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாரம சம்பத் பங்கேற்ற நிகழ்வொன்றின்போது, அவர்மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதியின் வீடும் முற்றுகையிடப்பட்டது. இந்நிலையிலேயே ஆளுங்கட்சியின் நிகழ்வுகளை தவிர்த்து வருகின்றனர் என கூறப்படுகின்றது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK