ஜொன்ஸ்ட்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கினை முன்கொண்டு செல்லும் நோக்கம் இல்லை..!


சதொச சேவையாளர்களை பல்வேறு சேவைகளில் ஈடுபடுத்தியதாக தெரிவித்து அமைச்சர் ஜொன்ஸ்ட்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்போவதில்லை என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கடந்த 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் வர்த்தக மற்றும் நுகர்வோர் நடவடிக்கைகளுக்கான அமைச்சராக கடமையாற்றிய போது சதொச சேவையாளர்களை மாற்று கடமைகளில் ஈடுபடுத்தியதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இலஞ்ம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்து மேல் நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK