அரிசியை வழங்காத அரசாங்கம் பொருளாதாரத்தைப் பற்றி பேசுகின்றது : ஜே.வி.பி!


சாதாரண விலைக்கு அரிசியினை வழங்க முடியாதுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என  மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிபிடுகையில்,

“நாட்டின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக தம்மை அடையாளப்படுத்தி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தினரால் இன்று வரை பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.

எம்.சி.சி உடன்படிக்கை மற்றும் எக்சா உடன்படிக்கை போன்றவை கைச்சாத்திடப்படமாட்டாது என்பது தொடர்பில் பொதுமக்களுக்கு இதுவரை எந்தவொரு உறுதிமொழியினையும் அரசாங்கம் வழங்கவில்லை.

அரிசி  கட்டுப்பாட்டு விலை தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தினால் இதுவரை 5 வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன.

எனவே சாதாரண விலைக்கு அரிசியினை வழங்கமுடியாதுள்ள தற்போதைய அரசாங்கத்தினால்  எவ்வாறு பொருளாதாரத்தை கட்டியெழுப்பமுடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

(Capital News)

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK