ஐ.தே.கட்சியின் தலைமையகத்தை பராமரித்து செல்ல முடியாத நிலைமை


ஸ்ரீ ஜயவர்தனபுர - பிற்றகோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை பாரமரித்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தலைமையகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த மாதம் அவர்களில் சம்பளத்தில் அரைவாசியே வழங்கப்பட்டுள்ளதுடன் சிறு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.

சிறிகொத்தவில் உள்ள தொலைபேசி அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் உள் வரும் அழைப்புகள் மாத்திரம் செயற்பட்டு வருகின்றன.

சிறிகொத்தவின் பராமரிப்பு செலவுகளுக்கான பணத்தை இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர் தயா கமகேவே செலுத்தி வந்தார்.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, புதிய பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் நீண்டகாலமாக கட்சியின் தலைமையகத்திற்கு செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin