"மனித மனங்களில் தமது சேவைகளால் வாழும் ரிஷாட் பதியுதீன் என்னும் ஆர்த்மார்த்தத்துக்கு பிரார்த்தனை செய்வோம்"

 


- தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா!

மனிதன் மனிதனாக வாழ நினைத்தாலும் சமூகமும் சூழலும் சில சமயங்களில் இதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதில்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக, இன்றைய எமது நிலையினை நாம் மீட்டிப் பார்ப்பதுதான்,காலத்திற்கு செய்யும் பெரும் சமர்ப்பணமாகும்.

பாதிக்கப்பட்ட ஒரு சமூகம், தமது தேவைகளையும் உரிமைகளையும் அடைந்துகொள்வதற்காக,  எத்தனையோ போராட்டங்களை, தியாகங்களை செயகின்றதை, வரலாற்று நெடுகிலும் 'போராட்டமே வாழ்க்கை' என்ற தலைப்பின் கீழ் பேசிக்கொண்டிருப்பதை காண முடிகின்றது.

இதிலிருந்து இவர்கள் மீளுவதற்காக முயற்சித்தவைகள்  தோல்வியில் சென்றது. பின்னர், பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் தீர்வுகள் இறுதிப் பரிணாமமாக மாறியுள்ளதை தற்போது, எம்மால் நோக்க முடிகின்றது.

விடுதலை என்பதற்குக் கருத்து கூற பல புத்திஜீவிகள் முனைந்த போதும், இந்த விடுதலை எந்த ஊரை நோக்கி பயணிக்கப் போகின்றது? என்ற கேள்விக்கு பதிலினை பெற முடியாத நிலையில், எமது நாட்டின் சிறுபான்மைச் சமூகம் அங்கலாய்த்துக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. 

இப்படிப்பட்ட ஒரு சமூகத்திற்கு, அரசில் ரீதியான தமது வாழ்வுரிமையினை மீளப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, "அரசியல்" என்னும் பிரவேகத்துக்கு வலிந்து அழைக்கப்பட்டவர் தான் "ரிஷாட் பதியுதீன்" என்கின்ற நாமமாகும்.

1990 ஆம் ஆண்டு, வடக்கில், மன்னார் மாவட்டத்தில் இருந்து இடப்பெயர்வுக்குள்ளான ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒருவராக ரிஷாட் பதியுதீனும் உள்ளடக்கப்படுகின்றார். இந்த இடப்பெயர்வி்ன் வலிகளை சுமந்துகொண்டு, அகதி முகாம் வாழ்க்கையினை அனுபவித்துக்கொண்டிருக்கும் போது,  இந்த மக்களின் துயரங்களும், துன்பங்களும் ரிஷாட் பதியுதீனை ஆக்கிரமிப்புச் செய்கின்றது. இதனது வெளிப்பாடுதான், தமது உரிமைகள் பறிக்கப்பட்ட போது,  'அதனை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது' என்பதை நிரூபித்துக் காட்ட ரிஷாட் பதியுதீனுக்கு கிடைத்ததொரு வரமாக, இதனை  மக்கள் பார்க்கத் துவங்கினர். 

இதனது வெளிப்பாடுதான், 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் அவருக்கு கிடைத்த அங்கீகாரமாகும். அன்று முதல் இன்று வரை, ரிஷாட் பதியுதீன் என்னும் பெயர் அரசியலிலும், சமூகத்தின் மத்தியிலும் மறக்காமல் பேசப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளதை, பல சான்றுகள் பல சந்தர்ப்பங்களில் ஒளி வீசுகின்றன.

மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுக்கள், ரிஷாட் பதயுதீனின் நேர்மையான அரசியல் செயற்பாட்டினை கண்டதுடன், ஆட்சி அமைப்புக்கு அவரை அரவணைத்துச் சென்றதையும், இன்றைய அரசியல் நட்சத்திரங்கள் மறந்துவிடக் கூடாது. நீண்ட அரசியல் பயணத்தின் ஒரு தற்காலிகத் தடையாக, ரிஷாட் பதியுதீனின் தற்போதைய சிறை வாழ்வு காணப்பட்ட போதும், அவரது ஆரம்பம்,  இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்துகொண்டே போகும் என்பதில் அவரும், அவரது ஆதரவாளர்களும் ஒருமித்த மனதுடனேயே இருக்கின்றதை, எம்மால் நோக்க முடிகின்றது.

'அரசியலில் எப்போதும் நண்பனும் இல்லை. எதிரியுமில்லை' என்ற அரசியல் கற்றலை மீளப் பார்க்க வேண்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், ரிஷாட் பதியுதீனுக்கு கொடுக்கப்பட்ட அமைச்சுக்களை வைத்து, அவர் ஆற்றிய பணிகளுக்காக சர்வதேசம் பாராட்டியது. இது போன்று,  அவர் மூலம், எமது நாட்டு மக்கள் அடைந்துகொண்ட  நன்மைகளை, இன்று சிலர் மறந்து பேசினாலும், அதனை அவர்கள் அனுபவித்தமைக்கு நன்றி கூறக் கூட நேரமில்லாத நிலையினை நாம் காண்கின்றோம். 'மனிதன் மறதிக்குரியவன். ஆனால், செய் நன்றி மறந்தவனாக இருக்க முடியாது' என்பதை, நாம் ஒவ்வொரு நிமிடமும் நினைவுகூற விரும்புகின்றோம்.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள், சிறுபான்மைச் சமூகத்தின் விடியலுக்காகப் போராடினார். இன்று அதே பணியினை ரிஷாட் பதியுதீன் என்ற ஆத்மா செய்கின்றது. அவர் செய்த இந்தத் தியாகம், இன்று அவரை சிறைக் கம்பிக்குள் முடக்கியுள்ளது. இலங்கை அரசியல் சாசனத்தின் முக்கிய விதப்புரையான, வாக்களிக்கும் உரிமையினை பெற்றுக் கொடுத்தமை தான், இன்று அவர் நான்கு சுவர்களுக்குள் ஒடுக்கப்பட்டு, 'கைதி' என்னும் பெயருடன், கண்டவர்கள் கதை சொல்லும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நீதியும், நேர்மையும், சத்தியமும் தோற்றால், மக்கள் வாழ்வதற்கான பூமி இனி இல்லை என்பதால், இறைவன் ஒருவன் இருக்கின்றான். அவன் நீதியாளன், அநீதி இழைக்கப்பட்ட ஒருவரின் பிரார்த்தனையினை எவ்வித திறையுமின்றி ஏற்றுக்கொள்கின்றவன் என்பதை பலமாக நம்பிய கூட்டத்தினர் கேட்கும் துஆ பிரார்த்தனகள், நிச்சயமாக அங்கீகரிக்கப்படும் என்பது ஈமானிய உள்ளங்களின் நம்பிக்கையாகும்.

1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வடபுல மக்களின் கருப்பு தினமான இந்த ஒக்டோபர் மாதம் நினைவுகூறப்படுகின்ற போது, இந்த சமூகத்தின் விடியலுக்காக புறப்பட்ட "ரிஷாட் பதியுதீன்" என்னும் நாமம், இன்றைய மாதத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ளதானது, மீண்டும் ஒரு கருப்பு நாளின் வரலாற்றுப் பதிவுக்கு வழிவகுத்துள்ளது.

பிறக்கின்ற எவரும் தலைவராகப் பிறப்பதில்லை. மாற்றமாக அவர்கள் சமூகத்தின் உணர்வுகளால் செதுக்கப்படுகின்ற சிற்பிகள் என்பதால், அவர்கள் இறைவனின் அருளால் உயர்வடைகின்றனர் என்பது தெளிவாகின்றது. மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணம் செய்தவர்கள், மனிதர்களின் மனங்களில் வாழும் நினைவுகள். இதற்கொப்ப வடக்கு மக்களின் வாக்குரிமையினை பாதுகாக்க எடுத்த முயற்சியானது, இன்றைய ரிஷாட் பதியுதீனை கம்பிக்குள் தள்ளி, அழகு பார்க்கின்றது.

பறக்க சிறகுகள் இல்லை..

பார்ப்பதற்கு கண்கள் இல்லை..

கம்பிக் கூட்டின் கைகளின் தேய்வுகள்

மனதில் வலிக்கிறது.. இறைவா!

உன் கன்னியத்தின் பொருட்டால்

விடுதலையினை ரிஷாட் பதியுதீனுக்கு

வழங்குவாயாக..!

இந்தப் பிரார்த்தனைகள் தான், இன்று மூலை முடுக்குகளில் எல்லாம் ஓங்கி ஒலிக்கும், அசரீரியின் மௌன சப்தங்களாகும்!

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK