கம்பனிகள் பதிவாளர் திணைக்கள சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தம்


நாட்டில் தற்போது நிலவி வரும் கொவிட் 19 தொற்று காரணமாக, கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவைகள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது.

கம்பனிகள் பதிவாளர் நாயகம் டி.என்.ஆர். சிறிவர்தன அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கம்பனிகளை பதிவு செய்தல், சங்கங்களை பதிவு செய்தல், பொது ஒப்பந்தங்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் இணைய வழி மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அச் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான சகல விடங்களையும் திணைக்களத்தின் வலைத்தளத்தின் ஊடாகவும் www.drc.gov.lk மற்றும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களின் ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம் என கம்பனிகள் பதிவாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

கம்பனிகளை பதிவு செய்தல் - 011 - 2689616
பொது ஒப்பந்தங்களை பதிவு செய்தல் - 011-2689215
தகவல் தொழிநுட்ப பிரிவு - 011-2689239

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK