அதிரடியாக குறைக்கப்படும் ரணில் - மைத்திரியின் பாதுகாப்பு


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர் 100 பேரில் 94 பேர் மீளப்பெறப்படவுள்ளதுடன், பொலிஸார் 100 பேரில் 54 பேர் மட்டுமே தொடர்ந்தும் சேவையாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட பொலிஸார் 200 பேரில் 60 பேர் மட்டுமே தொடர்ந்தும் சேவையாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர் தங்கியிருந்த வீட்டை திரும்ப ஒப்படைக்கும் படியும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK