சிங்கள தாய்மார்களுக்கு பலவந்தமாக கருவுறாமை அறுவை சிகிச்சைகள் செய்ததாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் சிஹாப்தீன் மொஹமம்மட் ஷாபி மீது போலீஸ் புகார் அளித்த பல தாய்மார்கள், இப்போது குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளனர்.
800க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்திருந்த நிலையின், 268 புகார்களை இதுவரை போலீசார் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த 268 தாய்மார்களின், சுமார் 10 தாய்மார்கள் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். மேலும் தனது புகார்களை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
மேலும் 650 புகார்கள் விசாரிக்கப்பட உள்ள நிலையில், அதில் மேலும் பல தாய்மார்கள் குழந்தைகளை பெற்றெடுத்ததாக அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(Ceylon Muslim)
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK