கண்டியில் நிலஅதிர்வு! மற்றுமொரு சிறப்பு விசாரணை குழு அனுப்பி வைப்பு

கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட அதிர்வு குறித்து ஆய்வு செய்ய புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் மற்றொரு அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 29இல் கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து இரவு 8.30 மணியளவில் ஒரு அசாதாரண அதிர்வு ஏற்பட்டது.
எனினும் இந்த சம்பவம் புவியதிர்வு என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியக இயக்குநர் சஜ்ஜன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மற்றொரு குழுவை இன்று காலை கண்டியில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சஜ்ஜன டி சில்வா தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK