ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையில் பெரும்பான்மையை பெரும் பொதுஜன பெரமுன

வெளியாகி வரும் பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை விட அதிகமான ஆசனங்களை கைப்பற்றும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 154 ஆசனங்களை கைப்பற்றும் என அந்த கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் தகவல்கள் கூறுகின்றன.
வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியை தழுவி வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை எனக் கூறப்படும் கொழும்பு மாவட்டத்தில் அந்த கட்சி ஒரு ஆசனத்தை கூட கைப்பற்ற முடியாத நிலைமை காணப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை இழப்பார் எனவும் பேசப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய பலப்பிட்டிய, ஹிரியால, அக்மீமன தொகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 70 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
தற்போதைய தேர்தல் முடிவுகளின் படி தென் மாகாணத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்திலும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK