அதிக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டதுக்காக விருது வழங்கி கொளரவிப்பு.

சில்மியா யூசுப்.

அதிக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டதுக்காக அண்மையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமாகிய
இம்ரான் மகரூப்.

முஸ்லிம் இளம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவருக்கு அதிக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டதுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் Manthri.lk யினால் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கடந்த பாராளுமன்ற காலத்தில் தொன்னூறு வீதத்துக்கு அதிகமான பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்  இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

 அந்தவகையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர் 
என்பது குறிப்பிட்ட ஒரு  அம்சமாகும்.


சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் இம்ரான் மகரூப் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய இருவர் மட்டுமே அதிக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டு இந்த கௌரவத்தை பெற்றுள்ளனர் என்பது குறுப்பிடத்தக்கது.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK