நிகழ்வுகளில் பங்குபற்றுவோர் தொகையை 200 ஆக அதிகரிக்க திட்டம்

திருமண வைபவங்கள் உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகளில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கையை 200ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பான முன்மொழிவு, கொவிட்-19ஐ கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணிக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

அகில இலங்கை நிகழ்வு மண்டபங்கள் மற்றும் உணவு விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக திருமண வைபவம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை 100ஆக இதுவரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை போதாது என்று குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK