சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பிற்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பும் இந்தியா

 



மத்திய ஆபிரிக்க நாடான சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பிற்கு (São Tomé and Príncipe) மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பியுள்ளது. இது உலகளாவிய தெற்கிற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

வெளியுறவு அமைச்சின் கூற்றுப்படி, இந்த உதவியில் உயிர்காக்கும் மருந்து வகைகள், இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் மொனிட்டர்கள் மற்றும் ஸ்ட்ரிப்கள் போன்ற அத்தியாவசிய மருந்துகள், உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் இதில் அடங்கும்.

“உலகளாவிய தெற்கிற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இன்சுலின், இரத்த குளுக்கோஸ் மொனிட்டர்கள் மற்றும் ஸ்ட்ரிப்கள் போன்ற உயிர்காக்கும் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை உள்ளடக்கிய மருத்துவப் பொருட்களின் மனிதாபிமான உதவி சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த உதவி சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பிற்கு பொது சுகாதார சேவைகளை வலுப்படுத்த உதவும்,” என்று வெளியுறவு அமைச்சு தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது

News Editor-2

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்