எதிர்வரும் 08.09.2024 ஆம் திகதி மாணவர்களுக்கு சரியான கல்வி வழிகாட்டல்களை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்துவது ஒரு சமூக கடமை ஆகும். சர்வதேச ரீதியில் அவர்களை தயார்படுத்தி எதிர்கால சவால்களை முறியடிக்கக்கூடிய வகையில் அவர்களை உருவாக்க வேண்டியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு களுத்துறையில் அமைந்துள்ள சமூக தொண்டு நிறுவனமான களுத்துறை அபிவிருத்தி அமைப்பு (KDC) மற்றும் அமேசன் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து எதிர்வரும் 08.09.2024 ஆம் திகதி களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் காலை 9:30 முதல் 12:30 வரை இலவச உயர்கல்வி, தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் G.C.E (O/L ) மற்றும் G.C.E (A/L ) மாணவர்களும், பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர், உயர்கல்வி மற்றும் தொழில் தேடுகின்றவர்களும் கலந்து கொள்ள முடியும்.
இது முற்றிலும் இலவசமான நிகழ்ச்சியாகும், பெற்றோர்களும் வருகை தருவது மிகவும் பொருத்தமானதாகும்.
வருகை தரும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். ஆகவே நீங்களும் உங்கள் நண்பர்களுடன் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.
இந்த நிகழ்வுக்கு வளவாளராக பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும், அமேசன் உயர் கல்வி நிறுவன பணிப்பாளருமான திரு. இல்ஹாம் மரிக்கார் வருகை தரவுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு : 0765 770 733
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK