எலிசபெத் மகாராணி காலமானார்


 இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். 


96 வயதான அவர் உடல் நலம் இன்மையால் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்.

இந்நிலையில், அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்த நிலையில், சமீபத்தில் புதிதாக தெரிவான பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸை சந்தித்து, அவருக்கு வாழ்த்துக் கூறியிருந்தார். 

கடந்த இரண்டு நாட்களாக சுகவீனமுற்றிருந்த மகாராணி, பால்மோரல் இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர் எலிசபெத் மகாராணி.

பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரச பதவியில் இருந்தவர்.

தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். 

அவரது மரணத்தையடுத்து, முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ல்ஸ், புதிய அரசராக இருந்து 14 பொதுநலவாய நாடுகளுக்குத் தலைவராக வழிநடத்தவுள்ளார்

Faz

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK