பொத்துவில் - பொலிகண்டி வரையிலான பேரணி - சாணக்கியன் உள்ளிட்ட சிலருக்கு நீதிமன்றம் அழைப்பாணை


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட சிலருக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கல்முனை நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேருக்கு இவ்வாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கல்முனை நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றின் உத்தரவினை மீறி போராட்டத்தில் பங்கேற்றதாக இவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது என சுமார் 29 பேருக்கு எதிராக நீதிமன்றில் பொலிஸார் தடையுத்தரவுகளை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேர் தடையுத்தரவினை மீறி போராட்டத்தில் பங்கேற்றனர். இதன் அடிப்படையில் சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக இவ்வாறு நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK