இலங்கையில் ஜனாஸா எரிப்பை நிறுத்து - கனடா பாராளுமன்றத்தில் கையொப்பங்களுடன் மனுவை சமர்ப்பித்து உரை


இலங்கையில் COVID தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றமை தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் நேற்று (23) மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் சல்மா ஸாஷிட் இந்த மனுவை சமர்ப்பித்து உரையாற்றினார்.

கனடாவில் உள்ள இலங்கையை பூர்வீகமாகக்கொண்டவர்கள்  கையொப்பமிட்ட மனுவை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதாக இதன்போது சல்மா ஸாஷிட் குறிப்பிட்டார்.

COVID-19 தொற்றினால் மரணிக்கும் அனைவரின் உடல்களையும் கட்டாய தகனம் செய்யும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறு மனுவில் கையொப்பமிட்டவர்கள் கோரியுள்ளனர்.

இலங்கை அரசின் குறித்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் எவையும் இல்லை எனவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு புறம்பாகவே அச்செயற்பாடு இடம்பெறுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறுபான்மையினரான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் அடக்கம் செய்யும் மத, கலாசார நடைமுறைக்கு மதிப்பளிக்குமாறும் கட்டாயத் தகனத்தை நிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை கனேடிய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என மனுவில் கையொப்பமிட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK