கோவிட் தடுப்பூசி பற்றி தமக்கு நம்பிக்கை கிடையாது என தம்மிக்க பாணியைத் தயாரித்த தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.
கோவிட் நோய்த் தொற்றை இல்லாதொழிக்கக்கூடிய பாணி மருந்து ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தம்மிக்க பண்டார ஊடகங்களில் கருத்து வெளியிட்டதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தம்மிக்க பண்டார கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வது போன்றதொரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
எனினும் தாம் கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என தம்மிக்க பண்டார திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தமக்கு சேறு பூசும் நோக்கில் திரிபுபடுத்தப்பட்ட புகைப்படம் ஒன்றை பயன்படுத்தி தாம் தடுப்பூசி பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் பாணியை தயாரித்து வருவதாகவும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மருந்தை பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK