எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆளும் கட்சியின் உறுப்பினர்கள்


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அரசாங்கத்தின் முக்கிய ராஜாங்க அமைச்சர் மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்திற்கு வந்து, வெளியில் செல்லும் சந்தர்ப்பத்தில் அவரை சந்திப்பதற்காக இவர்கள் காத்திருந்துள்ளனர்.

ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, சாரதி துஷ்மன்ன மற்றும் பிரேம்நாத் சீ தொலவத்தை ஆகியோரே எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தான் தலைவராக இருந்த போதிலும் விசேட மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே செயற்படுவேன் என இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

கொரோனா உடல்களை அடக்கம் செய்வதில் பிரச்சினையில்லை என்று மருத்துவர்கள் கூறியிருந்தால் , அதனை செய்வதில் பிரச்சினையில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, கொரோனா உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பட்டிலேயே தானும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இந்த பேச்சுவார்த்தை நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK