ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுதாரியின் தந்தை தொடர்ந்தும் விளக்கமறியலில்


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடரில் கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்திய தற்கொலை தாரியின் தந்தையான அஹமட் லெப்பை அலாவுதீன் எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபருக்கு எதிராக வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன், சம்பவம் குறித்துத் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை குண்டுதாரியின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தமாகத் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால், சந்தேகநபரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கொழும்பு நீதவான் அலாவுதீனை எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK