குர்ஆனில் உள்ள சட்டங்களை நாட்டு சட்டத்தில் இணைக்க முடியாது ; சிங்கள ராவய


குர்ஆனில் உள்ள சட்டங்களை நாட்டு சட்டத்தில் இணைக்க முடியாது என சிங்கள  ராவய அமைப்பின் அக்மீமன தயரத்ன தேரர் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவிளாலர் மாநாட்டில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

ஒரு நாட்டில் அனைவருக்கும் சமமாக சட்டம் இருக்க வேண்டும்.வெவ்வேறு இனங்களுக்கு வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு நான்கு திருமணங்கள் முடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்களவர்கள் இரண்டு திருமணங்கள் முடித்தால் 15 வருடங்கள் உள்ளே செல்ல நேரிடும்.

12 வயது  வயது பிள்ளைகளை திருமணம்  முடிக்க முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதே சிங்கள இளைஞர் 12 வயது பிள்ளையை மணம் முடித்தால் அவரை 15 வருடங்கள் அல்லது 20 வருடங்கள் சிறையில் அடைக்கிறார்கள்.

ஒரு பிரிவினருக்கு ஒரு சட்டமும் இன்னும் ஒரு பிரிவினருக்கு இன்னும் ஒரு சட்டமும் இருக்க முடியாது. ஜனாதிபதி உடனடியாக இந்த சட்டங்களை மாற்றி ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயத்தை கொண்டுவர வேண்டும் என கூறினார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK