புறக்கோட்டையில் கொரோனா தொற்றாளர்கள்! தொடர்பு தடமறிதல் இடம்பெற்று வருகின்றது


கொழும்பு புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ள நிலையில், தொடர்பு தடமறிதல் இடம்பெற்று வருகின்றது.

நான்காம் குறுக்கு தெருவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் பணியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பம்பலப்பிட்டி நந்தன கார்டனில் உள்ள விடுதியில் வசிக்கும் குறித்த வர்த்தக நிலையத்தின் 22 ஊழியர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் மேலும் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் அமைப்பின் செயலாளர் மகேந்திர பாலசூரிய கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த வர்த்தக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள அனைத்து கடைகளும் தற்காலிகமாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வர்த்தக நிலையத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளருக்கு எவ்வாறு நோய் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவரவில்லை

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK