ஐனநாயக அடிப்படை உரிமையான வாக்குரிமையை நிலைநாட்டியமைக்கு உதவி செய்ததற்காக ஒருவரைக் கைது செய்வதானது உலகில் வேறெங்கும் நிகழ்ந்திராத சாதனையாகும் - ஹஸீப் மரிக்கார்.


நாட்டினுடைய சகல இன மக்களினதும் எதிர்காலம் குறுகிய அரசியல் இலாபத்தினால் கேள்விக்குரியாகும் நிலை தலைவர் ரிசாட் பதியுதீன் அவர்களின் கைது முயற்சியினால் தோன்றியுள்ளதாக பேருவளை பிரதேச சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கழுத்த்துறை மாவட்ட அமைப்பாளருமான பொறியியலாளர் ஹஸீப் மரைக்கார் தெரிவித்துள்ளார். மக்கள் இறைமையின் மூலமான வாக்குரிமையை பாதுகாப்பதற்காக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கைது செய்வதன் மூலம் தற்போதய  உலக அரசியல் ஒழுங்கில் வித்தியாசமான எதிர்  பெயரினைப்  பெறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அரசாங்கமானது தனது தோல்விகளை மறைக்கவும் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவுமான முயற்சிகளில் ஈடுபடும்போது சிறுபான்மையினரை இலக்கு வைக்கின்றனர். தான் சார்ந்த சமூகத்திற்கும் மட்டுமல்லாது ஏனைய இன மக்களுக்கும் சேவை செய்து தன்னுடைய தேர்தல் மாவட்டத்தில் முன்னிலையில் வெற்றிபெற்ற ஒருவரை சிறையிலடைக்க முயற்சி செய்வது நாட்டின் நிலையான அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஒன்றாகும். உணர்வுசார்ந்து அறியாத மக்களை கொந்தளிப்பு நிகழ்ச்சிகளை உருவாக்கிவிட்டு வேறொரு கோணத்தில் தனது இயலாமையை மறைப்பது முழு நாட்டிற்கும் கேடாகும் நிலை உருவாகியுள்ளது.

பஸ்பரம் புரிந்துணர்வுள்ள சகவாழ்வையும் அபிவிருத்தியையும் பேணுவதற்கு குறுகிய அரசியல் இலாபங்களை இல்லாதொழிக்கும் போராட்டத்தில் இலங்கையர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் எனது தனது அறிக்கையில் ஹஸீப் மரைக்கார் தெரிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK