முகக் கவசம் தொடர்பில் பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!


பயன்படுத்தி விட்டு அகற்றப்படும் முகக் கவசங்களை வீதிகள் உட்பட பொது இடங்களில் வீச வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிலர் முகக் கவசங்களை அணிந்து விட்டு அதனை பாதுகாப்பற்ற முறையில் வீசிச் செல்வதால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் முறைப்பாடு செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீக்கப்படும் முகக் கவசங்களை பாதுகாப்பான முறையில் குப்பை தொட்டியில் அல்லது உரிய இடத்தில் போடுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை சுகாதார முறையில் அகற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Admin