ரிஷாட் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று!


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி தாக்கல் செய்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட் 7 பேரின் பெயர்கள் அந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னார் பிரதேசத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் அழைத்து சென்றமை ஊடாக பொது சொத்துக்கள் முறைக்கேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து அவரைக் கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் அவரை தேடி விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.

இந்தநிலையில், 6 நாட்களின் பின்னர் தெஹிவளை – எபனேசர் வீதியில் அமைந்துள்ள மாடிக்குடியிருப்பில் தலைமறைவாகியிருந்த ரிஷாட் பதியுதீன் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK