பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இராஜினாமா?


பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அடுத்த ஆண்டு தனது பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளத்தை காரணம் காட்டி போரிஸ் ஜோன்சன், அடுத்த ஆண்டு தன் பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு 150,402 பவுண்ட் சம்பளமாக பெறும் போரிஸ் ஜோன்சன், அது தனக்கு போதுமானதாக இல்லை எனவும், அதைக்கொண்டு வாழ முடியாது எனவும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் போரிஸ் ஜோன்சன், மாதத்திற்கு 23,000 பவுண்ட் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, போரிஸ் ஜோன்சன் அடுத்த ஆண்டு தனது பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK