பசிலின் ராஜதந்திர நகர்வுகள்! 5 பேர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்


20ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு பெற்றுக் கொள்வதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த 5 பேரின் ஆதரவு பெற்றுக் கொள்ளும் பொறுப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு இணையவுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கும் எதிரணியில் சிலர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த ஆசனங்களின் எண்ணிக்கை 145ஆகும்.

டக்ளஸ் தேவானாந்தவின் கட்சி, அத்தாவுல்லா கட்சி, பிள்ளையானின் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் இணைந்தமையினால் 150ஆக ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. எனினும் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து ஆளும் கட்சியில் தற்போதைய ஆசனங்களின் எண்ணிக்கை 149 ஆக குறைந்துள்ளது.

20ஆம் அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கு 150 பேரின் ஆதரவு அவசியமாகியுள்ளது. எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவரை ஆளும் கட்சியில் இணைக்கும் நடவடிக்கை பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் பஸில் ராஜபக்ஷ செயற்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK