அரசாங்கத்தின் தொழிலற்ற ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பமாகிறது.
முறைசார் கல்வி அல்லது தொழில் நிபுணத்துவம் இல்லாதவர்கள் மற்றும் வறுமையில் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தின் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் கீழ் தொழில்களை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் இந்த திட்டம் அமுல் செய்யப்படுகிறது.
10 அகவைக்கும் 40 அகவைக்கும் உட்பட்ட கல்விப்பொதுத் தராதரம் அல்லது முறைசார கல்வியைப் பெறாதவர்களே இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.
இவர்களுக்கு பயிற்சிக்காலமான 6 மாதங்களுக்கு மாதாந்தம் 22ஆயிரத்துக்கு 500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும்.
இதனையடுத்து அவர்களுக்கு தொழில் திறமைகளுடன் மாதம் ஒன்றுக்கு 35ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
10 வருடங்கள் அவர்கள் தொடர்ச்சியாக பணியாற்றும்போது அவர்கள் ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்துக்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK