முர்ஷித் முளஃப்பர் மௌலவின் இராஜினாமாவும் சில உண்மைகளும்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பதில் பொதுச் செயலாளர் ஷெய்க் முர்ஷித் முளஃப்பர் சட்டத்தரணியுடன் சாட்சியமளிக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரான போது தனது கையடக்க தொலைபேசியை எடுத்துச் சென்றமை, சட்டத்தரணியிடம் ஒப்படைத்து சாட்சியங்களை ஒலிப்பதிவு செய்தமை தனது அறியாமை காரணமாக இடம்பெற்ற தவறு என ஏற்றுக் கொண்டு விசாரணைகள் நிறைவுறும் வரை தனது பதவியை இராஜினாமாச் செய்தமையை வரவேற்கிறேன்.

கடந்த பல மாதங்களாக ஜனாதிபதி ஆணைக்குழு பொலிஸ் பிரிவில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற பொழுது கையடக்க தொலைபேசியை வைத்திருக்க அனுமதி வழங்கப் பட்டிருந்ததமையாலும், ஆணைக்குழு நடவடிக்கைகளை ஊடகவியலாளர்கள் பதிவு செய்து கொண்டிருந்ததாலும் தாம் அதனை பதிவு செய்வதில் தவறில்லை என்ற எண்ணத்திலும் தொடர்ந்தும் தம்மைத் போதிய தயார் படுத்தலுடன் அடுத்தடுத்த அமர்வுகளுக்கு ஆஜராகவுமென அவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என அறிய வருகிறது.

பிரதான சட்டத்தரணியிடமன்றி உதவிக்குச் சென்ற இளம் சட்டத்தரணியிடம் தனது கையடக்க தொலைபேசியை ஒழிவு மறைவின்றி பதிவு செய்யும் நோக்கத்திலேயே ஒப்படைத்ததாககவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

உண்மையில் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் கையடக்க தொலைபேசிகளை வைத்திருக்க அனுமதியில்லை என்ற அறிவுறுத்தலை அல்லது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகளை தான் அல்லது குறித்த சட்டத்ததரணி அறிந்திருக்க வில்லை என்று நீதிமன்றில் நியாயம் கற்பிக்க முடியாது என்பதனை அறிவோம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கை அவர்களுக்கு பாதகமில்லாமல் அறிவுறுத்தல் அல்லது எச்சரிக்கையுடன் நிறைவிற்கு வர பிரார்தித்துக் கொள்வோம்.

இந்த நாட்டின் மீதான தேசப்பற்று, நீதித்துறையை சட்டம் ஒழுங்கை மதித்து நடத்தல் குறித்து அதிகமதிகம் வலியுறுத்தி வழிகாட்டும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மீதோ கண்ணியமிக்க உலமாக்கள் மீதோ மேற்படி துரதிஷ்ட வசமான நிகழ்வு கலங்கம் ஏற்படுத்தி விடக் கூடாது எனவும் எதிர்பார்க்கின்றேன்.

குறிப்பாக வரலாற்றில் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தை கடந்து செல்லும் நாம் தீய சக்திகள் மற்றும் ஊடக கூலிப்படைகளின் இடையறாத விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் சிவில் சன்மார்க்கத் தலைமைகளை மதித்து பார்வையாளர்களாக அன்றி அவர்களது தன்னார்வத் தொண்டுகளில் பணிகளில் பங்காளர்களாக எம்மையும் இணைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK