சிறுபான்மையினரில் “கபினட்” அந்தஸ்த்துள்ள அமைச்சைப் பொறுப்பேற்கப்போவது யார்?

அமைச்சரவை நாளை பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. அதனால், அமைச்சுக்களை வழங்குவதில் நெருக்கடிகள் எதிர்நோக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.
தற்போதுள்ள நிலவரப்படி சிறுபான்மையினரில் இருவருக்கு மட்டும்தான் ‘கபினட்’ அந்தஸ்த்துள்ள அமைச்சு வழங்கப்படவுள்ளதாகத் தெரிகின்றது.
முஸ்லிம்களில் அலி சப்ரிக்கு மட்டுமே”கபினட்” அமைச்சு.
தமிழர்களில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மட்டுமே “கபினட் ” அமைச்சு.
அதாவுல்லா. விமலவீர திசாநாயக்க, பிள்ளையான், ஜீவன் தொண்டமான், ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சு வழங்கப்படும். பிள்ளையான் சிறையில் இருப்பதால் நாளை பதவியேற்பாரா என்பது உறுதியாக இல்லை.
இராஜாங்க அமைச்சு பெயர் பட்டியலில் அங்கயன் இராமநாதனின் பெயர் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. எனினும், அவருக்கு வழங்குமாறு முன்னாள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை வைத்திருப்பதாக ஒரு தகவல்.
வியாழேந்திரன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோருக்கு எதுவித அமைச்சும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK