ஞானசார தேரர் நாடாளுமன்றம் செல்வது உறுதி! அறிவிக்க தயாராகும் கட்சி

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வது என எங்கள் மக்கள் சக்தி கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சியின் மத்திய செயற்குழு ஞானசார தேரரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய அனுமதியை வழங்கியதாக எங்கள் மக்கள் சக்தி கட்சியின் ஊடக செயலாளர் எரந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இந்த தீர்மானம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க உள்ளனர்.
இந்த நிலையில் ஞானசார தேர்தல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்வது உறுதியாகியுள்ளது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சி 67 ஆயிரத்து 758 வாக்குகளை பெற்று தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை பெற்றுக்கொண்டது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK