பிரதேச சபை உறுப்பினர் ஹசீப் மரிக்கார் கைது

பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹசீப் மரிக்கார்  விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரி கொடை ஜும்மா பள்ளி அருகாமையில் பள்ளிவாசலுடைய  வெளிப்புற வாய்க்கால் புணர் நிர்மாணமப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்  பள்ளிவாசலுக்கு அருகாமையில் முச்சக்கர வண்டி ஓடும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் பேருவளை பிரதேச சபை தலைவர் மேணக்க உடன் கதைத்து வாய்க்கால் திருத்தப் பணியை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதற்கு அமைய இப்பணியை நிறுத்த பொலிஸார் அறிவுருத்தப்பட்டனர் .  பிரதேச பொலிசாரிடம் மக்கள் இது தொடர்பில் கதைத்த நிலையில் திடீரென விஷேட அதிரடிப்படையினர் வந்து தாக்குதல் நடத்தினர். பொதுமக்களை அதிரடிப்படையினர் தாறுமாறாக தாக்கினர்
 

      பேருவளை    பிரதேசசபை உறுப்பினர்களான ஹசீப் மரிக்கார்,பைஸான் நைசர்  உடனடியாக வந்து பொலீஸாரிடம் இது சம்பந்தமாக கலந்துரையாடும் போது எஸ் டி எப் பிரதேச சபை உருப்பினர்கள் இருவரையும்   தாக்கியுள்ளனர். மேலும்  ஹஸீப் மரிக்காரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.எதிர் வரும் புதன் கிழமை வரை விளக்கமரியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK